sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பல மாதங்களாக வீணாகும் குடிநீர் எப்போது தீர்வு கிடைக்குமோ

/

பல மாதங்களாக வீணாகும் குடிநீர் எப்போது தீர்வு கிடைக்குமோ

பல மாதங்களாக வீணாகும் குடிநீர் எப்போது தீர்வு கிடைக்குமோ

பல மாதங்களாக வீணாகும் குடிநீர் எப்போது தீர்வு கிடைக்குமோ


ADDED : நவ 11, 2025 03:52 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், பாலசுப்பிர மணியன் நகர், பாலாஜி நகர், திருநகர் பகுதி குடியிருப்புகளுக்கு பெரியாறு குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின்மூலம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு வீடுகளில் மீட்டர் பொறுத்தாமல் குழாய்கள் காம்பவுண்ட் சுவருக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான குழாய்களுக்கு மூடி போடப்படவில்லை. இத்திட்டத்தில் சோதனைக்காக குடிநீர் திறக்கப்படுகிறது.

மூடிகள் இல்லாத குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீர் பல இடங்களில் பல மாதங்களாக ரோட்டில் சென்று வீணாகிறது.

தினம் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் இவ்வாறு வீணாகிறது. குழாய்களில் முறையாக மூடிகள் அமைக்க வேண்டும்.

இது குறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் மண்டல கூட்டத்திலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் செய்து வருகின்றனர். ஆனால் இப் பிரச்னைக்கு தீர்வு தான் காணப்படவில்லை. எப்போதுதான் இப் பிரச்னை முடிவுக்கு வரப்போகிறதோ.






      Dinamalar
      Follow us