sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வனவிலங்கு வாரவிழா போட்டி பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

/

வனவிலங்கு வாரவிழா போட்டி பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

வனவிலங்கு வாரவிழா போட்டி பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

வனவிலங்கு வாரவிழா போட்டி பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு


ADDED : அக் 05, 2025 03:03 AM

Google News

ADDED : அக் 05, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழ்நாடு வனத்துறை சார்பில் மதுரை வனக்கோட்டத்தில் அக். 2 முதல் 8 வரை வனவிலங்கு வார விழா கொண்டாடப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. வனவிலங்குகளுடன் இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள், ஒன்று முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல் 12ம் வகுப்பு என மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

'மனிதன் - வனவிலங்கு சகவாழ்வு' எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஓவியமாக வரைந்தோ, பேச்சாக பதிவு செய்தோ தங்கள் முழு பெயர், அலைபேசி எண், பள்ளியின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விவரங்களுடன், mduwildlife@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது chat.whatsapp.com/KqsCP8QMRUf37wfvcUVfXT என்ற வாட்ஸ் அப் குழுவிற்கு அனுப்ப வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் படைப்புகளை அனுப்பலாம்.

நாளை (அக். 6) இரவு 11:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுவோர், தங்கள் படைப்பின் அசலை மதுரை வனவிலங்கு சரக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெறுவோருக்கு மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் தலைமையில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு 90472 86690ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us