/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டக்குளம் பிரிவில் பாலம் அமைக்கப்படுமா
/
கட்டக்குளம் பிரிவில் பாலம் அமைக்கப்படுமா
ADDED : ஜூலை 09, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்: மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டக்குளம் பிரிவில் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி முகிலன்: கட்டக்குளத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டக்குளம் பிரிவிற்கு சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. இங்கு ஒருபுறம் மட்டுமே நிழற்குடை உள்ளது. அங்கு ஓய்வெடுக்க ரோட்டை கடக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் பாலம் அமைப்பதன் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்கலாம் என்றார்.