ADDED : மார் 03, 2026 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரத்தில் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
வேல்பாண்டி: இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். நகரி மெயின் ரோட்டில் பஸ்ஸ்டாப் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
மக்கள் பொது சுகாதாரத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இதனை பயன்படுத்தி வந்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் மோட்டார் பழுதானதால் தொட்டி பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.
இதனால் குழாய்கள், மின் ஒயர்கள்,தொட்டி சேதமடைந்து காட்சி பொருளாக உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

