/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் முனைவோராக ஆர்வமுள்ள பெண்களே இதப்படிங்க முதல்ல.. மகளிர் குழுக்களை மேம்படுத்துது மாவட்ட நிர்வாகம்
/
தொழில் முனைவோராக ஆர்வமுள்ள பெண்களே இதப்படிங்க முதல்ல.. மகளிர் குழுக்களை மேம்படுத்துது மாவட்ட நிர்வாகம்
தொழில் முனைவோராக ஆர்வமுள்ள பெண்களே இதப்படிங்க முதல்ல.. மகளிர் குழுக்களை மேம்படுத்துது மாவட்ட நிர்வாகம்
தொழில் முனைவோராக ஆர்வமுள்ள பெண்களே இதப்படிங்க முதல்ல.. மகளிர் குழுக்களை மேம்படுத்துது மாவட்ட நிர்வாகம்
ADDED : ஆக 13, 2025 02:29 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த பள்ளி, கல்லுாரிகளில் இயற்கை சந்தை நடத்தப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 10 ஆயிரத்து 199, நகர்ப்பகுதிகளில் 10 ஆயிரம் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 12 முதல் 20 பேர் வரை ஒரு குழுவாக இணைந்து சுயவேலைவாய்ப்புகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக அரசு நிதிஉதவி செய்து அவர்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற ஏற்பாடு செய்கிறது.
இக்குழுவின் செயல்பாடுகளை இன்னும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டங்களின் போது இயற்கை சந்தை என்ற பெயரில் மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஊறுகாய், ஜூஸ் வகைகள், பொம்மைகள், துணிமணிகள் என பல்வேறு பொருட்களையும் காட்சிப்படுத்த கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல வளாகத்தில் தேநீர் விடுதி நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக கடைகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இக்குழுக்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மகளிர் திட்ட இணை இயக்குனர் தமிழரசி, உதவி இயக்குனர் ஜெயராஜ் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி மக்கள் கூடும் இடங்கள், கோயில்கள், மார்க்கெட், அரசுக் கல்லுாரிகள், தனியார் கல்லுாரி வளாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இயற்கை சந்தைகளை நடத்தவும், ஸ்டால்களுக்கு அனுமதியும் வழங்குகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: மகளிர் குழுக்களின் மேம்பாட்டுக்காக சுழல் நிதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு முதலில் ரூ.10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் என கடனுதவி வழங்கி, திருப்பிச் செலுத்தும் தன்மைக்கேற்ப கடன்தொகையும் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு மகளிர் குழுக்கள் கடன் பெற்று சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவில் கடந்தாண்டு ரூ.1440 கோடி வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொழில் செய்யும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மானியத்துடன் ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. வங்கி மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம். இதில் வட்டிமானியமாக 4 சதவீதமும் வழங்கப்படும். மகளிர் குழுக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க இதர மாநிலங்களில் நடக்கும் சந்தைகளில் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான போக்கு வரத்துச் செலவு, அங்கு தங்கும் செலவையும் அரசே ஏற்கிறது. தொழில் முனைவோருக்கு உற்பத்தி தொழிலுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது என்றனர்.