ADDED : ஜன 31, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்தியப் பெண்கள் கூ ட்டமைப்பு (ஐவின்) சார்பில் மதுரை சி.ஐ.ஐ., அலுவலகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.
திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் பேசுகையில்,''போலீஸ் விசாரணை செயல்முறைகள், எதிர்கொள்ளும் சவால்கள், பொது ஒத்துழைப்பு குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்.
சட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் அழுத்தம், பொறுப்பு மற்றும் மீள்தன்மை குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.
போலீஸ், பொதுமக்களிடையே நல்லிணக்கம் வேண்டும்'' என்றார். ஐவின் நிர்வாகிகள் பூர்ணிமா, சத்யா ஏற்பாடுகளைச் செய்தனர்.

