sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துணி உறையுடன் கம்பளிப் போர்வை; மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்

/

துணி உறையுடன் கம்பளிப் போர்வை; மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்

துணி உறையுடன் கம்பளிப் போர்வை; மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்

துணி உறையுடன் கம்பளிப் போர்வை; மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்


ADDED : டிச 12, 2024 08:16 AM

Google News

ADDED : டிச 12, 2024 08:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் முதன்முறையாக பயணிகளுக்கு, துணி உறையுடன் கூடிய கம்பளிப் போர்வை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்களில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணை மற்றும் உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு வழங்கப்படுகின்றன. அதில் கம்பளிப் போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கைத் துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்குப் பின்பும் சலவை செய்யப்படுகிறது.

கம்பளிப் போர்வை மட்டும் 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை உலர் சலவை செய்யப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பயணிகளுக்கு துாய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்கும் நோக்கில் மதுரை கோட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (டிச.10) முதல் சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயிலின் குளிர்சாதன வகுப்புபயணிகளுக்கு கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளுடன் வழங்கப்பட்டன.

இந்த துணியாலான உறைகளில் கம்பளிப் போர்வை வைக்கப்பட்டு வெளியே வராதபடி ஒட்டப்படுகிறது. ஒவ்வொரு முறை உபயோகத்திற்கு பின்னும் உறை மட்டும் கழற்றி சலவை செய்யப்படுகிறது. உறையை பயன்படுத்துவதன் மூலம், கம்பளிப் போர்வையை சுகாதாரமாக பாதுகாக்க முடியும். ரயில்வேயின் இம் முயற்சியை பயணிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us