/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுாரில் ரூ.2.8 கோடியில் பணி
/
அலங்காநல்லுாரில் ரூ.2.8 கோடியில் பணி
ADDED : டிச 27, 2024 05:06 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி வலசையில் ரூ.57 லட்சத்தில் சமுதாயக்கூடம் மற்றும் அலங்காநல்லுார், வலசை, குறவன்குளத்தில் ரூ.ஒரு கோடியே 51 லட்சத்தில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பேரூராட்சி உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் சாமிநாதன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, அலங்காநல்லுார், பாலமேடு நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், கவுன்சிலர் சுகப்பிரியா, அணி நிர்வாகிகள் தவசதிஷ், சந்தனகருப்பு, பிரதாப் பங்கேற்றனர்.