sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க பணி துவக்கம்

/

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க பணி துவக்கம்

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க பணி துவக்கம்

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க பணி துவக்கம்


ADDED : பிப் 10, 2025 04:54 AM

Google News

ADDED : பிப் 10, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள் நேற்று முதல் பேரையூர் தாலுகாவில் உள்ள டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி யூனியனில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடக்கின்றன.

இதன்படி ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சேடபட்டி வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறியதாவது: வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது விவசாயிகள் கொடுக்கும் தகவல்களை அடிக்கடி சரி பார்க்க வேண்டியுள்ளது. இதில் நேர விரயம், பிரச்னை ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஊராட்சி அலுவலகம், இ சேவை மையங்களில் விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது.

விவசாயிகள் தங்கள் ஆதார் எண், சுய விவரங்கள், பட்டா, சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி, ரேஷன் கார்டு போன்ற தகவல்களை நேரில் சென்றும் தெரிவிக்கலாம் என்றார்.






      Dinamalar
      Follow us