நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை காந்தி மியூசியத்தில் உலக மரபு வார விழாவையொட்டி சொற்பொழிவு நடந்தது.
மாணவி ஆர்த்தி வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். மதுரையில் பஞ்சபூத தலங்கள் குறித்து காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசினார். சவுராஷ்டிரா பெண்கள் மேல் நிலைப் பள்ளி என்.எஸ். எஸ். ஒருங்கிணைப்பாளர் தேவிகா உலக மரபு வாரத்தின் சிறப்புகளை விளக்கினார். கல்வி அலுவலர் நடராஜன், கணக்காளர் சுமித்ரா, தொல்லியல் ஆர்வலர் பழனிகுமார் உட்பட பலர் பேசினர். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.