ADDED : பிப் 28, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு ரிக்வேத ஸம்ஹிதா ேஹாமம் நேற்று துவங்கியது.
மார்ச் 7 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடக்கும் இதில் வேத விற்பன்னர்கள் பங்கேற்று ரிக்வேத ஜபம் செய்கின்றனர். முதல் நாளான நேற்று 'வேத நெறி' எனும் தலைப்பில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

