sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

/

போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு


ADDED : ஏப் 24, 2024 08:56 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:போலீஸ் ஏட்டை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் சாராய வியாபாரிகள் 6 பேரை குற்றவாளிகள் என மயிலாடுதுறை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் சரத்தில், 2012ம் ஆண்டு காரில் சாராயம் கடத்தியவர்களை, நடமாடும் சோதனை சாவடி பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சிங்காரம் தலைமையிலான போலீசார் கார் மற்றும் பைக்கில் விரட்டிச் சென்றனர்.

சாராயம் கடத்திச் சென்ற காரை பைக்கில் சென்ற போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரன், 40, மறித்து பிடிக்க முயன்றார். காரை ஓட்டி வந்த கலைச்செல்வன், 54, காரை நிறுத்தாமல் ஏட்டு ரவிச்சந்திரன் மீது மோதிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் இறந்தார்.

தொடர்ந்து மீன்சுருட்டி கலைச்செல்வன், 54, கருணாகரன், 54, சங்கர், 44, ராமமூர்த்தி, 44, உள்ளிட்ட ஆறு பேர் மீது கொள்ளிடம் போலீசார் கொலை வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

இவ்வழக்கின் விசாரணை, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 21 சாட்சிகளை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம்சாட்டப்பட்ட கலைச்செல்வன் உள்ளிட்ட ஆறு பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, வழக்கை இன்று ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us