/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
எஸ்.ஐ., மனைவியிடம் சங்கிலி பறிப்பு ராணுவ வீரர், கூட்டாளி சிக்கினர்
/
எஸ்.ஐ., மனைவியிடம் சங்கிலி பறிப்பு ராணுவ வீரர், கூட்டாளி சிக்கினர்
எஸ்.ஐ., மனைவியிடம் சங்கிலி பறிப்பு ராணுவ வீரர், கூட்டாளி சிக்கினர்
எஸ்.ஐ., மனைவியிடம் சங்கிலி பறிப்பு ராணுவ வீரர், கூட்டாளி சிக்கினர்
ADDED : ஜூலை 10, 2024 08:47 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை மேலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் சப் - இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜானகி, 2ம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது டூ-வீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் ஜானகி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். குத்தாலம் போலீசார் விசாரித்தனர்.
அதில், தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்த் மற்றும் நீடாமங்கலம் சாலையில் வசித்து வரும் சிவா என தெரிந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 4 சவரன் தங்க சங்கிலி, இரு மொபைல் போன்கள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரிபுராவில் ராணுவத்தில் பணிபுரியும் வசந்த், விடுமுறையில் ஊருக்கு வரும் போது சிவாவுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தில் மது மற்றும் சூதாட்டம் என சுற்றி திரிந்தது தெரிந்தது. மேலும், இவர் சிவாவுடன் சேர்ந்த மூன்று வழிப்பறி குற்றங்களிலும் ஈடுபட்டிருப்பதும் தெரிந்தது.