sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : ஜூலை 30, 2024 10:56 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:நிதி நிறுவனங்களில் வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாக கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அடுத்த பாகசாலை கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்,33; இவர் மயிலாடுதுறை, சீர்காழி, பாடசாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களிடம் மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் வட்டியில்லா, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் கமிஷன் தொகையை வசூலித்துள்ளார். ஆனால், யாருக்கும் கடன் வாங்கி தரவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஏசுராஜ் கடன் வாங்கி தருவதாக மாவட்டம் முழுவதும் பலரிடம் ரூ.50 லட்சம் அளவிற்கு பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது.

அதன்பேரில் ஏசுராஜை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us