/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
செவிலியர் மர்ம சாவு உறவினர்கள் மறியல்
/
செவிலியர் மர்ம சாவு உறவினர்கள் மறியல்
ADDED : மார் 01, 2025 03:01 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பணியில் இருந்த செவிலியர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அடுத்த மேல ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தையல்நாயகி, 30; ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர். கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு சென்றார்.
இரவு, 9:00 மணிக்கு, வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்ட சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். உடன் அவரை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் தையல்நாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், தையல்நாயகி இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.