/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஹோட்டலில் ஓசி சாப்பாடு வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
/
ஹோட்டலில் ஓசி சாப்பாடு வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
ஹோட்டலில் ஓசி சாப்பாடு வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
ஹோட்டலில் ஓசி சாப்பாடு வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : செப் 02, 2024 06:48 AM

மயிலாடுதுறை: சீர்காழியில் ஹோட்டல் ஒன்றில் டி.எஸ்.பி., பெயரைக் கூறி, 'ஓசி' சாப்பாடு வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போக்குவரத்து போலீஸ் பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பாஸ்கர் என்பவர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். பணி நேரத்தில் மது போதையில் இருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சீர்காழி புறவழி சாலையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு காலை வேளையில் சென்ற சிறப்பு எஸ்.ஐ., பாஸ்கர், சீர்காழி டி.எஸ்.பி., ராஜ்குமார் பெயரைச் சொல்லி 'ஓசி'யில் டிபன் கேட்டுள்ளார்.
கடை ஊழியர்களும் அவர் கேட்ட உயர்தர உணவு வகைகளை தாராளமாக கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அன்று இரவும் சிறப்பு எஸ்.ஐ., பாஸ்கர் மது போதையில் அதே ஹோட்டலுக்கு சென்று டி.எஸ்.பி.,க்கு என ஓசியில் டிபன் வகைகளை பார்சல் கேட்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர்கள் டிபன் வகைகளை கொடுத்து அனுப்பியதுடன், சந்தேகம் அடைந்து, சீர்காழி ட்ராபிக் சார்ஜன்ட் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த டி.எஸ்.பி., ராஜ்குமார், நடந்த சம்பவம் குறித்து எஸ்.பி.,க்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஹோட்டலில் ஓசி சாப்பாடு வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., பாஸ்கரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.