sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

விஷம் கலந்த மதுவை குடித்தவர் பலி

/

விஷம் கலந்த மதுவை குடித்தவர் பலி

விஷம் கலந்த மதுவை குடித்தவர் பலி

விஷம் கலந்த மதுவை குடித்தவர் பலி


ADDED : ஜூலை 10, 2024 08:41 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:பூச்சி மருந்து கலந்த மதுவை குடித்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த பில்லாவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஜோதிபாசு,32; மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி சசிகலா கோயம்புத்தூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் மனமுடைந்த ஜோதிபாசு நேற்று முன்தினம் காரைக்கால் நல்லாத்தூரில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு மதுபானம் மற்றும் பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மது பாட்டிலில் பூச்சி மருந்தை கலந்து குடித்துவிட்டு பாதி வைத்திருந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ஜெரால்டு,24; ஜோதிபாசு சொல்லியும் கேட்காமல் பூச்சி மருந்து கலந்த மது பானத்தை குடித்துள்ளார். இதுகுறித்து நண்பர்களிடமும், ஜெரால்டு குடும்பத்தினரிடம் ஜோதிபாசு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெரால்டு இறந்தார். ஜோதிபாசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us