/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
/
பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
ADDED : செப் 22, 2024 01:36 AM
மயிலாடுதுறை: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்த செல்லதுரை,60, என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது 2 பைபர் படகுகளில் 37 மீனவர்கள் கடந்த 20ம் தேதி இரவு 10.00 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, 3 படகுகளை பறிமுதல் செய்ததுடன், 37 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.