sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

நான்கு வழிச்சாலையில் தேவைக்கேற்ப அணுகு சாலை:கலெக்டர் அறுவுறுத்தல்

/

நான்கு வழிச்சாலையில் தேவைக்கேற்ப அணுகு சாலை:கலெக்டர் அறுவுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் தேவைக்கேற்ப அணுகு சாலை:கலெக்டர் அறுவுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் தேவைக்கேற்ப அணுகு சாலை:கலெக்டர் அறுவுறுத்தல்


ADDED : நவ 14, 2024 05:04 PM

Google News

ADDED : நவ 14, 2024 05:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை;விழுப்புரம்-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தேவைக்கேற்ப அணுகு சாலை அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம்-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளின் ஒருகட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை 45ஏ பணி திட்டத்தின் கீழ் ரூ.1905 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 55.5 கி.மீ. தொலைவுக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி தாலுக்கா பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை சாலை அமைக்கும் பணியால் சில கிராமங்களுக்குச் செல்லக்கூடிய ஏற்கனவே இருக்கக் கூடிய சாலைகள் அடைபடுவதாகவும், இதனால் பல கி.மீ தொலவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட அனந்தமங்கலம், திருக்கடையூர் ஊராட்சி வெள்ளக்குளம், நாராயணன் பிள்ளை சாவடி, சீர்காழி தாலுகாவிற்கு செம்பதனிருப்பு, காரைமேடு ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அணுகுசாலை மற்றும் வேகத்தடைகள் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், நெடுஞ்சாலை பணிகளில் சாலை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, சாலை அமைப்பு பணிகளை மேற்கொண்டு, விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் சக்திவேல், சீர்காழி ஆர்டிஓ. சுரேஷ், தனி தாசில்தார் (நெடுஞ்சாலை திட்டங்கள்) ஹரிஹரன், தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us