/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
புரிஞ்சிக்கவே மாட்டீங்களா! மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! இ.பி.எஸ். கண்டனம்
/
புரிஞ்சிக்கவே மாட்டீங்களா! மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! இ.பி.எஸ். கண்டனம்
புரிஞ்சிக்கவே மாட்டீங்களா! மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! இ.பி.எஸ். கண்டனம்
புரிஞ்சிக்கவே மாட்டீங்களா! மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! இ.பி.எஸ். கண்டனம்
ADDED : டிச 01, 2024 04:56 PM

சென்னை; முக்கியமான பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறேன் என்ற புரிதல் துளியும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை தமிழக அரசு கேள்விக்குறியாக்கி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள் அதே மாவட்டத்தில் அடுத்த கொலை நடந்திருப்பது, அதுவும் அதிக போக்குவரத்து நடமாட்டம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது, இந்த விடியா தி.மு.க., ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
முக்கியமான பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறேன் என்ற புரிதல் துளியும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ரமேஷ் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள விடியா தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.