/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திமுக பூத் ஏஜென்டை தாக்க முயற்சி: அதிமுக மா.செ. மீது புகார்.
/
திமுக பூத் ஏஜென்டை தாக்க முயற்சி: அதிமுக மா.செ. மீது புகார்.
திமுக பூத் ஏஜென்டை தாக்க முயற்சி: அதிமுக மா.செ. மீது புகார்.
திமுக பூத் ஏஜென்டை தாக்க முயற்சி: அதிமுக மா.செ. மீது புகார்.
ADDED : ஏப் 19, 2024 01:45 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திமுக. பூத் ஏஜெண்டை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த அதிமுக மாவட்ட செயலாளர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை லோக்சபா தொகுதி பூம்புகார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், திமுக சார்பில் பூத் ஏஜென்ட் ஆக பணியாற்றிய சந்திரசேகர் என்பவர் ஓட்டு போட வரும் பொது மக்களிடம் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டதாக புகார் கூறப்பட்டது. தகவல் அறிந்த அதிமுக வேட்பாளரின் தந்தையும், மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் சம்பந்தப்பட்ட பூத்திருக்கு சென்று தேர்தல் விதிகளை மீது எப்படி உள்ளே வாக்கு சேகரிக்கலாம் என்று கேட்டு திமுக பூத் ஏஜென்ட் சந்திரசேகர் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சட்டையை பிடித்து தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தார்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து சந்திரசேகரன் பூத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்ததோடு அதிமுக மாவட்ட செயலாளர் தன்னை தாக்க முயன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

