sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

/

தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


ADDED : ஜன 31, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 31, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: நாங்கூரில் நடந்த 11 தங்க கருட சேவை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை சேவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேங்களில் 11 கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாங்கூரில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் 11 தங்க கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கருடவ சேவை உற்சவம் நேற்று இரவு நடந்தது.



நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமன், வரதராஜன், வைகுந்த நாதன், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி, கோபாலன் ஆகிய 11 பெருமார்களும், புருஷோத்தமன் கோவிலில் இருந்து மணவாள மாமுனிகளும் எழுந்தருள திருமங்கை ஆழ்வார் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

இன்று அதிகாலை ஷேச வாகனத்தில் மணவாள மாமுனிகளும், ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வாரும் தொடர்ந்து தங்க கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக மணிமாட கோவில் வாயிலில் எழுந்தருள திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது பக்தர்கள் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களை மனமுருக பாடினர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெருமாள்கள், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் வீதி உலா காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 11 பெருமாளை தங்க கருட வாகனத்தில் ஒரு சேர கண்டு சேவித்தனர்.






      Dinamalar
      Follow us