sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

 குடிபோதையில் நண்பரை கொன்றவர் கைது

/

 குடிபோதையில் நண்பரை கொன்றவர் கைது

 குடிபோதையில் நண்பரை கொன்றவர் கைது

 குடிபோதையில் நண்பரை கொன்றவர் கைது


ADDED : நவ 28, 2025 12:11 AM

Google News

ADDED : நவ 28, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே குடிபோதையில் நண்பரை அடித்து கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருத்தோணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், 43; கொத்தனார் மற்றும் ராஜா, 43; டிரைவர். நண்பர்களான இருவரது மனைவியரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டனர். இதனால், இருவரும் தினமும் இரவு ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும் ஒன்றாக மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, கண்ணனை தாக்கினார். அப்போது தடுமாறி கீழே விழுந்த கண்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த ராஜா, உடனடியாக கண்ணனை, '108 ஆம்புலன்ஸ்' மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார்.

நேற்று காலை சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். தகவலறிந்த சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us