
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் முதுநிலை காவலராக பணியாற்றி வந்தவர் காளிதாஸ்,45.
இவர் நேற்று இரவு பணி முடிந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று உள்ளார். ஆணைக்காரன் சத்திரம் சோதனை சாவடி அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதியதில், காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.