sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மாணவன் தற்கொலை முயற்சி ஆசிரியர்கள் மீது வழக்கு

/

மாணவன் தற்கொலை முயற்சி ஆசிரியர்கள் மீது வழக்கு

மாணவன் தற்கொலை முயற்சி ஆசிரியர்கள் மீது வழக்கு

மாணவன் தற்கொலை முயற்சி ஆசிரியர்கள் மீது வழக்கு


ADDED : நவ 09, 2024 02:13 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிமாறன். லாரி டிரைவர். இவரது மகன் மனோஜ்குமார்,16, மயிலாடுதுறை தியாகி ஜி நாராயண சுவாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.

இவர் பள்ளிக்கு சரியாக வராததால், வகுப்பு ஆசிரியர் தங்கப்பன், மாணவனின் பெற்றோரை அழைத்துவரக் கூறியுள்ளார்.

கடந்த 6ம் தேதி பெற்றோரை அழைத்துச் செல்லாமல் பள்ளிக்கு சென்ற மனோஜ்குமாரை, ஆசிரியர் தங்கப்பன் அடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மனோஜ்குமாரை தங்கப்பன், தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் ஆகியோர் அடித்ததாகக் கூறப்படுகிறது.

அதில் மனமுடைந்த மனோஜ்குமார், தற்கொலை செய்ய எண்ணி, எலி மருந்தை வாங்கி சாப்பிட்டார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார் நேற்று, ஆசிரியர்கள் தங்கப்பன், தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us