sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

காரில் வந்து ஆடுகள் திருடும் நபரை தேடும் போலீசார்

/

காரில் வந்து ஆடுகள் திருடும் நபரை தேடும் போலீசார்

காரில் வந்து ஆடுகள் திருடும் நபரை தேடும் போலீசார்

காரில் வந்து ஆடுகள் திருடும் நபரை தேடும் போலீசார்


ADDED : மே 21, 2024 06:57 AM

Google News

ADDED : மே 21, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம் : நாகை அடுத்த தெற்கு பொய்கை நல்லுாரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 38. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய தன் ஆடுகளை, வீட்டின் வாசலில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு காரில் வந்த வாலிபர்கள், காரை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு, மணிவண்ணன் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகளை திருடி, காரில் ஏற்றி தப்பினர்.

காலையில் ஆடுகளை காணாமல் அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், வேளாங்கண்ணி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மர்ம நபர்கள் காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் 'சிசிடிவி' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், ஆடு திருடுபவர்களின் முகம் நன்றாக தெரிகிறது.

இதுகுறித்து மணிவண்ணன் கூறுகையில், ''திருடு போன மூன்று ஆடுகளும் ஜமுனாபாரி என்ற உயர் வகையை சேர்ந்தவை. ஒவ்வொன்றும் தலா 50,000 ரூபாய் மதிப்புள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us