sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 25, 2024 01:21 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயிற்சி பெண் டாக்டர் கொலை

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக. 25-

மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள, ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.

நாமக்கல் ஒன்றிய செயலாளர் தனுஷ் தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், தலைவர் லட்சுமணன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் தங்கராஜ் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.

பெண் மருத்துவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். முழுமையான விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். வழக்கை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us