/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து: பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி
/
நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து: பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி
நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து: பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி
நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து: பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி
ADDED : ஏப் 11, 2025 01:13 AM
நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து: பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி
நாமக்கல்:நாமக்கல், கொ.ம.தே.க.,- எம்.பி., மாதேஸ்வரன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு, பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி பரவியதால் பரபரப்பு
நிலவியது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் கிராமத்தில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் அவரது தாயார் வரதம்மாள், 80, வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, 1:30 மணியளவில் வீட்டில் உள்ள ஏ.சி.,யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த வரதம்மாள், வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் செல்ல முற்பட்டனர். அதற்குள் வீட்டில் இருந்த ஏ.சி., மெத்தை, டேபிள், சேர், பேன், சுவிட்ச் பாக்ஸ் ஆகியவை தீயில் எரிந்தன. மேலும் வீட்டில் இருந்த, 70 ஆயிரம் ரூபாயும் எரிந்தது. நாமக்கல்
தீயணைப்பு நிலைய வீரர்கள் எரிந்து கொண்டிருந்த மெத்தைகள், டேபிள், ஏ.சி., ஆகியவற்றை அணைத்தனர். இதற்கிடையே நேற்று மதியம் எம்.பி., வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் பரவின. கூடுதல் எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் கிராமத்தில், எம்.பி., மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வருதம்மாள் வசித்து வருகிறார். அதிகாலை, 1:30 மணிக்கு வீட்டில் உள்ள ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக தனியார் 'டிவி'யில் எம்.பி., வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த செய்தி புரளியானது. இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.