/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி அன்று வழங்க 50,000 லட்டுகள் தயார்
/
ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி அன்று வழங்க 50,000 லட்டுகள் தயார்
ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி அன்று வழங்க 50,000 லட்டுகள் தயார்
ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி அன்று வழங்க 50,000 லட்டுகள் தயார்
ADDED : ஜன 08, 2025 03:08 AM
ராசிபுரம், ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு வழங்க, 50,000 லட்டுகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.
ராசிபுரம், மேட்டுத்தெருவில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி, வரும், 10 காலை, 5:00 மணிக்கு நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு, 'ஜனகல்யாண்' சார்பில், 34ம் ஆண்டாக லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, 50,000 லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.
இதற்காக, 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 50 கிலோ நெய், 1,000 கிலோ கடலை எண்ணெய், 50 கிலோ முந்திரி, ஏலக்காய், 25 கிலோ திராட்சை ஆகியவற்றை கொண்டு, 50,000 லட்டு தயாரிக்கும் பணி, 50 தொழிலாளர்களுடன் தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. முதலில் பொன்வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து, லட்டு வைத்து வழிபாடு செய்யப்படும். பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். லட்டு தயாரிக்கும் ஏற்பாடுகளை, 'ஜனகல்யாண்' அமைப்பு தலைவர் பரந்தாமன், செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோல், ஆர்.புதுப்பாளையம் கரியபெருமாள் கோவிலில், 17ம் ஆண்டாக லட்டு வழங்கவுள்ளனர். பக்தர்களுக்கு வழங்க, 10,000 லட்டுகள் தயாரிக்கும் பணி நாளை தொடங்கு
கிறது. பட்டணம் கரிய பெருமாள் கோவிலில், 15ம் ஆண்டாக வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இவர்கள் பக்தர்களுக்கு வழங்க, 7,000 லட்டுகளை தயாரிக்க உள்ளனர்.