/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
/
மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
ADDED : ஜன 25, 2025 01:14 AM
மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
ப.வேலுார், : -எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், இரண்டாவது மாநில அளவிலான மெட்டீரியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப்--2025 கராத்தே போட்டி, கரூரில் நடந்தது. போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அதில், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சக்ரா நகரில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி மாணவ, -மாணவியர், 35 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இப்பள்ளி மாணவர்கள், 10 பேர் முதலிடம், 10 பேர் இரண்டாம் இடம், 15 பேர் மூன்றாமிடம் பிடித்தனர். மேலும், ஒட்டுமொத்த கோப்பைகளையும் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.
கராத்தே பயிற்சியாளர் தங்கம், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். சாதனை படைத்த மாணவ, -மாணவியரை, பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூரணம், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

