/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி சாதனைஅலுவலர், பணியாளர்களுக்கு நினைவு பரிசு
/
வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி சாதனைஅலுவலர், பணியாளர்களுக்கு நினைவு பரிசு
வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி சாதனைஅலுவலர், பணியாளர்களுக்கு நினைவு பரிசு
வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி சாதனைஅலுவலர், பணியாளர்களுக்கு நினைவு பரிசு
ADDED : ஏப் 03, 2025 01:36 AM
வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி சாதனைஅலுவலர், பணியாளர்களுக்கு நினைவு பரிசு
நாமக்கல்:மாநில அளவில், நாமக்கல் மாநகராட்சி வரி வசூலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இதையடுத்து, அலுவலர்கள், பணியாளர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சியுடன், 12 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு, 2024 ஆக., 12ல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, நாமக்கல்
மாநகராட்சியில், 58,795 சொத்துவரி விதிப்புகள் உள்ளன.நாமக்கல் மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆகஸ்ட், 2024-25ம் நிதியாண்டிற்கான சொத்து வரி வசூலில், தமிழகத்தில் உள்ள, 24 மாநகராட்சிகளில், 22ம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து, சொத்து வரி வசூலில் படிப்படியாக முன்னேற்றம் செலுத்தி, 2024 நவம்பர் முதல், நடப்பு நிதியாண்டின் இறுதி வரை, மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. மேலும், 15வது மத்திய நிதிக்குழு மானிய தொகையை விடுவிக்க இந்த மாநகராட்சிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட சொத்துவரி வசூல் இலக்கு, 14.74 கோடி ரூபாய். அவற்றை, கடந்த, 11ல் அடைந்து, நாமக்கல் மாநகராட்சி, நடப்பாண்டிற்கான மத்திய நிதிக்குழு மானியத்தொகை பெற தகுதியான மாநகராட்சியாக உள்ளது.
சொத்துவரி தவிர்த்து, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில், 2024-25ம் நிதியாண்டிற்கான வசூலிலும் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. மேற்கண்ட இனங்களுடன் குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, திடக்கழிவு சேவை கட்டணம் உள்ளிட்ட அனைத்து இனங்
களுக்கான மொத்த வசூலில், 2024-25ல், நாமக்கல் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வசூலில் சாதனை படைத்ததை அடுத்து பாராட்டு விழா, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, வசூலில் சாதனை படைக்க உறுதுணையாக இருந்த, மேயர், அலுவலர்கள், பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

