/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராயல் சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
/
ராயல் சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : ஜன 15, 2025 01:06 AM
குமாரபாளையம்,:
குமாரபாளையம் ராயல் சர்வதேச பள்ளியில், 16ம் ஆண்டு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. ஈரோடு அச்சுதா மருத்துவமனை நிர்வாக தலைவரும், கண் டாக்டருமான பாலசுப்ரமணியம், திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். தாளாளர் அன்பழகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, பரத நாட்டியம், புராண நாட்டிய நாடகம், மோனோ ஆக்டிங், மேற்கத்திய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஸ்ரீவாரி அறக்கட்டளை அங்கத்தினர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.