/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 07, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
சேந்தமங்கலம், :காளப்பநாய்க்கன்பட்டியில், போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி வண்ணான்குட்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் சோதனை செய்த போலீசார், மனோகரன், 70, என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.