/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
/
மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : மார் 14, 2025 01:54 AM
மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
நாமக்கல்:மாசி பவுர்ணமியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர், நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்புகள், தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை
தரிசிக்க வருகின்றனர்.அந்த வகையில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபி ேஷகம் செய்யப்பட்டது. பின் மஞ்சள் வண்ண பட்டாடை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.