sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

/

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு


ADDED : பிப் 13, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

நாமக்கல்:''மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம், 23,848.98 கோடி ரூபாய் அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்து, திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக்குழுக் கூட்டம் நேற்று நந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

தொடர்ந்து, நபார்டு வங்கியின், 2025--26ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) மூலம், 23,848.98 கோடி ரூபாய்க்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு, 2025-26ம் ஆண்டுக்கு, பயிர் கடன், 10,751.96 கோடி ரூபாய், விவசாய முதலீட்டு கடன், 2,753.24 கோடி ரூபாய், விவசாய கட்டமைப்பு கடன், 72.13 கோடி ரூபாய், விவசாய இதர கடன்கள், 1,042.64 கோடி ரூபாய் என, மொத்தம், கடன் மதிப்பீடு, 14,619.98 கோடி ரூபாய்.

மேலும், சிறு, குறு நடுத்தர தொழில் கடன், 8,098 கோடி ரூபாய், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன், 211.63 கோடி ரூபாய், அடிப்படை கட்டுமான வசதி, 65.08 கோடி ரூபாய், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு, 796.04 கோடி ரூபாய் என, மொத்தம், 23,848.98 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என, மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட உதவும்.

வங்கிகள், இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது, மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து, வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us