sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 22, 2025 01:37 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு யூனியனில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

விவசாயி வேலுமணி, சவுதாபுரம்: ஓடை புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, கடந்த, 2019 முதல் தொடர்ந்து புகாரளித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி தட்டிக்கழிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆர்.டி.ஓ., சுகந்தி: இது சம்பந்தமாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி நடேசன், கொல்லப்பட்டி: திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், விவசாய நிலம் வழியாக செல்கிறது. இதனால், கரும்பு, தென்னை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆர்.டி.ஓ., சுகந்தி: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்யும்போது, அந்த வரைபடத்தில் ரோடு வழியாக கழிவுநீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களது விவசாய நிலத்தில் கழிவுநீர் செல்லும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us