/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்
/
பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்
பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்
பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்
ADDED : ஏப் 03, 2025 01:36 AM
பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் இந்து மலையாளி, நரிக்குறவர், இருளர்கள் ஆகியோர் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்து மலையாளி, நரிக்குறவர், இருளர்கள் ஆகியோர் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம், கிராம ஊராட்சி அலுவலகங்களில் நடத்தப்படவுள்ளது. முகாமில் கலந்து கொள்பவர்கள் குடும்ப அட்டை, ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப தலைவரின் போட்டோ, 2 ஆகியற்றுடன் வர வேண்டும். ராசிபுரம் தாலுகா செல்லியாம்பாளையம் ஏப்ரல், 7 காலை, 10:00 மணி, கருளாக்காடு; 16ல், குரங்காத்துப்பள்ளம்; 17ல் கார்கூடல்பட்டி; 18ல் அட்டக்கல்காடு; 21ல் நரைக்கிணறு; 22ல் உரம்பு; 23ல் மங்களபுரம்; மே, 7ல் மூலக்குறிச்சி; மே, 8ல், மூலப்பள்ளிப்பட்டி; 9ல், முள்ளுக்குறிச்சி, 12ல், நாரைக்கிணறு; 13ல், பச்சுடையாம்பாளையம்; 14ல், பெரப்பஞ்சோலை; 15ல், ஊணாந்தாங்கல் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.
பதிவு செய்பவர்கள், 18 வயது நிரம்பியவர்களாகவும், 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.