தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.பாளையத்தில் அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

ப.பாளையத்தில் அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

ப.பாளையத்தில் அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்


ADDED : ஏப் 04, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.பாளையத்தில் அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயக்காட்டூர் பகுதியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரூ.81.58 கோடி மதிப்பில், அடுக்கு மாடியில், 520 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குடியிருப்பும், 394 சதுர அடியில், ஒரு பல்நோக்கு அறை, ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, ஒரு கழிவறை, குளியலறையுடன் கட்டப்படுகிறது. மேலும் இப்பகுதியில் நுாலகம், சிறுவர் விளையாட்டு பூங்கா, ஐந்து கடைகள், ரேஷன் கடை, வாழ்வாதார மையம், உடற்பயிற்சி கூடம், டூவீலர் நிறுத்தும் இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்த குடியிருப்பு, காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்காக கட்டப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டுமான பணியை, நேற்று கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தையும், நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தையும் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us