/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : ஏப் 12, 2025 01:23 AM
சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம்.அதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் திருத்தேர் மலையை சுற்றி பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி தேரை, 'அரோகரா கோஷம்' முழங்க பக்தர்கள் மலையை சுற்றி இழுத்து வந்தனர். மாலை, 6:45 மணிக்கு, தேர் நிலையை சேர்ந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு, சத்தாபரண மகாமேரு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6:00 மணி முதல் மாலை வரை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, தினவும் இரவு சுவாமிக்கு ஒவ்வொரு மண்டல அறக்கட்டளை சார்பில், சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.