/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
13ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைகேட்பு நாள் கூட்டம்
/
13ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைகேட்பு நாள் கூட்டம்
13ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைகேட்பு நாள் கூட்டம்
13ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைகேட்பு நாள் கூட்டம்
ADDED : செப் 11, 2024 06:40 AM
நாமக்கல்: 'நாமக்கல்லில், வரும், 13ல் கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மண்ட-லத்தில், கூட்டுறவு சங்க பதிவாளரின் அறிவுரைப்படி, 2 மாதங்க-ளுக்கு ஒரு முறை, 2வது வெள்ளிக்கிழமை, நாமக்கல் மாவட்-டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின், பணியாளர்களின் குறைதீர்க்கும், பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது பணியாளர் நாள் நிகழ்வு வரும், 13ல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தின், 2வது தளத்தில் உள்ள, மண்டல கூட்-டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில், காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டுறவு நிறுவன
பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள், தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்-பங்களை நேரடியாக வழங்கலாம்.அந்த விண்ணப்பங்கள், நிகழ்ச்சியின்போதே ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, 2 மாதங்களுக்குள் குறைகள் தீர்வு செய்யப்படும். நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற
அனைத்து நிலை பணி-யாளர்களும், தங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால், பணியாளர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.