/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 25ல் வீர வணக்க நாள் கூட்டம்
/
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 25ல் வீர வணக்க நாள் கூட்டம்
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 25ல் வீர வணக்க நாள் கூட்டம்
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 25ல் வீர வணக்க நாள் கூட்டம்
ADDED : ஜன 22, 2025 01:24 AM
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 25ல் வீர வணக்க நாள் கூட்டம்
நாமக்கல்: 'கிழக்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி சார்பில், வரும், 25ல், நாமக்கல்லில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில், கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில், வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம், வரும், 25 மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் பூங்கா சாலையில் நடக்கிறது. மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் தலைமை வகிக்கிறார். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலுார் புகழேந்தி, பேச்சாளர் ஆரணி மாலா ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
கூட்டத்தில், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.