sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் ஆலைக்கு பதிவு செய்த கரும்பை தனியாருக்கு 'சப்ளை' செய்தால் நடவடிக்கை

/

மோகனுார் ஆலைக்கு பதிவு செய்த கரும்பை தனியாருக்கு 'சப்ளை' செய்தால் நடவடிக்கை

மோகனுார் ஆலைக்கு பதிவு செய்த கரும்பை தனியாருக்கு 'சப்ளை' செய்தால் நடவடிக்கை

மோகனுார் ஆலைக்கு பதிவு செய்த கரும்பை தனியாருக்கு 'சப்ளை' செய்தால் நடவடிக்கை


ADDED : ஆக 26, 2024 02:44 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'மோகனுார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கரும்பை, தனியார் ஆலைக்கு எடுத்து சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் மல்லிகா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மோகனுாரி-ல் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு, 2,400 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சம் டன் மதிப்பில், வரும், நவ., இரண்டாம் வாரத்தில் அரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2023-24ம் ஆண்டிற்கான அரவை பருவத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் அனைவருக்கும், கரும்புக்கான கிரை-யத்தொகை, தமிழக அரசின் ஊக்கத்தொகை நிலுவை ஏதும் இல்-லாமல் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யாத கரும்பை, ஆலையின் விதிகளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்-தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இது சட்டப்படி குற்றம். இதனால், ஆலைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு, பதிவு செய்யாத கரும்பை முறைகேடான வகையில், வெளிச்சந்-தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்-பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

அவ்வாறு, மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வரும் பட்சத்தில், முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்த-ரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலையின் விவகார பகுதிகளுக்கு உட்பட்ட பதிவு செய்யாத கரும்பில், எதிர்பாராத நேர்வுகளான, தீ விபத்து, நோய் மற்றும் பூச்சி தாக்குதல், போன்ற இனங்களுக்கு மட்டுமே ஆலையின் நிர்-வாக அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெற்று, பாதிக்கப்-பட்ட கரும்பை மட்டும் அப்புறப்படுத்திக் கொள்ளலாம். அதன் பின்பே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களை, காவல்துறை, போக்குவரத்து துறை மூலம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்-படும்.

மேலும், விவசாய அங்கத்தினர்கள் தங்களின் பதிவில்லா கரும்பை உடனடியாக பதிவு செய்து, 2024-25ம் ஆண்டு கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலையான, டன் ஒன்றுக்கு, 3,151 ரூபாய் மற்றும் தமிழக அரசின் கரும்பு உற்பத்திக்கான ஊக்-கத்தொகை பெற்று கொள்ளவும். விபரங்களுக்கு, 94899-00208 என்ற மொபைல் எண்ணில், கோட்ட கரும்பு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us