/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமியை கொலை செய்த இன்ஜினியர் மீது குண்டாஸ்
/
சிறுமியை கொலை செய்த இன்ஜினியர் மீது குண்டாஸ்
ADDED : செப் 07, 2024 07:50 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் சிறுமியை கொலை செய்த வழக்கில், சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் குண்டாசில் கைது செய்தனர்.
திருச்செங்கோட்டை சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார், 44; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், கடந்த ஜூலை, 27ல் வீட்டிற்கு அருகில் வசிக்கும், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் சிறுமியை கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.
இதில் காயமடைந்த சிறுமி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த, 22ல் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியை கொலை செய்த வழக்கில், செந்தில்குமாரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் பரிந்துரைப்படி, கலெக்டர் உமா செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள செந்தில்குமாரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வழங்கினர்.