/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதையில் கணவன் பலி போலீசில் மனைவி புகார்
/
போதையில் கணவன் பலி போலீசில் மனைவி புகார்
ADDED : ஆக 31, 2024 12:46 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கணவன் குடி போதையில் பலியானதாக போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
குமாரபாளையம், சூரியகிரி மலை அருகே வசித்து வந்தவர் முத்-துசாமி, 40, டிரைவர். இவரது மனைவி சத்யா, 33. இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளானது. முத்துசாமி வேலைக்கு செல்-லாமல், வீட்டில் குடித்து விட்டு எந்நேரமும் போதையில் இருந்து வந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சத்யா வேலைக்கு சென்று விட்டு இரவு, 7:30 மணியளவில் வந்ததால் வீட்டின் கதவை தட்டி பார்த்து, போதையில் கதவை திறக்க மாட்டார் என்று எண்ணி,
வெளியில் படுத்துக் கொண்டார்.
நேற்று காலை, 7:30 மணியளவில் எழுந்து, கதவை தட்டியும், ஜன்னல் வழியாக குச்சியை விட்டு, முத்துசாமியை எழுப்ப முயற்-சித்தும் பலனில்லை. அதனால் கதவின் கண்ணாடியை உடைத்து, தாழ்பாள் நீக்கி, உள்ளே சென்று
முத்துசாமியை பார்த்த போது மூச்சு, பேச்சில்லாமல் இருந்துள்ளார். இவரை மீட்டு குமாரபா-ளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோ-தித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.போதையில் கணவர் இறந்ததாக, குமாரபாளையம் போலீசில் சத்யா புகார் தெரிவித்துள்ளார்.