ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
நேற்று, ஆனி பவுர்ணமியையொட்டி, மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இரவு, 8:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.