ADDED : ஜன 18, 2025 01:17 AM
அ நிறம் | அளவு
சாராயம் பதுக்கிய பெண்ணுக்கு 'காப்பு'
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த தொட்டிகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா, 50; இவர் சாராயம் விற்பனை செய்வதாக, மொளசி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று மாலை மொளசி போலீசார், வசந்தா வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஒன்றரை லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் பதுக்கி வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த போலீசார், வசந்தாவை கைது செய்தனர்.
