நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சள் ஏலம் ரத்து
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட், நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும்.
ஜன., 7ல் கடைசியாக நடந்த ஏலத்தில், 358 மூட்டை மஞ்சள், 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது மஞ்சள் சீசன் முடிந்துவிட்டது. இருப்பு மஞ்சள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. வரத்து இல்லாததால், கடந்த, 3 வாரங்களாக ஏலம் நடக்கவில்லை. இதேபோல், நேற்றும் மஞ்சள் வரத்து இல்லாததால், ஆர்.சி.எம்.எஸ்., உள்பட தனியார் மண்டிகளிலும் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.