ADDED : பிப் 01, 2025 12:44 AM
அ நிறம் | அளவு
த.வெ.க., நிர்வாகிகள் மீது புகார்
ராசிபுரம் :ராசிபுரத்தில், நேற்று த.வெ.க., சார்பில் வரவேற்பு பேரணி நடந்தது. அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடப்பட்டிருந்த, திராவிடர் விடுதலைக்கழக கொடிகளை அகற்றி எறிந்தனர். இதுகுறித்து, திராவிடர் விடுதலைக்கழக நகர செயலாளர் ரங்கசாமி, ராசிபுரம் போலீசில் புகாரளித்தார்.
அதில், தங்களது அமைப்பு கொடியை சேதப்படுத்திய, த.வெ.க., நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.
