sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுப்பிரமணிய சுவாமிதிருவீதி உலா

/

சுப்பிரமணிய சுவாமிதிருவீதி உலா

சுப்பிரமணிய சுவாமிதிருவீதி உலா

சுப்பிரமணிய சுவாமிதிருவீதி உலா


ADDED : பிப் 13, 2025 01:36 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுப்பிரமணிய சுவாமிதிருவீதி உலா

ப.வேலுார்:-கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, பிராந்தகத்தில் உள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறுமுக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளி, பரமத்தி, ப.வேலுார் வழியாக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு சென்றடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அனைத்து காவடிகளும் சென்ற பின், கடைசியாக கந்தம்பாளையம் அருகே உள்ள பிராந்தகத்தில், சுப்பிரமணிய சுவாமி செல்வது வழக்கம். அதேபோல், நேற்று பிராந்தகம் சுப்பிரமணியர் சுவாமி காவடி கடைசியாக சென்றது. இந்த காவடியை வழிபட்ட பின், பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us