sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

/

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்


ADDED : பிப் 20, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தைக்குட்பட்ட, எருமப்பட்டி யூனியன், பழையபாளையம் கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவுரைப்படி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

நாமக்கல் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, உழவர் சந்தையின் புதிய நடைமுறை, அடையாள அட்டை புதுப்பித்து வழங்குதல், அதற்கான ஆவணங்கள் குறித்து விளக்கினார்.

எருமப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜவேல், துறையின் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் கோகுல், உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்யும் முறை, புதிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை, இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.

மேலும், விலை நிர்ணயம் செய்வதற்கு, வெளி விற்பனை விலை, சில்லரை விலை சேகரித்தல், விவசாயிகள் பதிவு செய்வது குறித்தும், கடை ஒதுக்கீடு செய்தல், வயல் ஆய்வு, இலவச தராசு, இலவச பஸ் வசதி உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் விளக்கப்பட்டது. வேளாண் துறையினர், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us